மேற்கு வங்க மாநிலம் கூச்பேகர் நகரில் மாதாபங்காவில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக தேந்தெடுக்கப்பட்டால் அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார். ஜனநாயக நாடான இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். மோடியின் மூன்று கோஷங்கள் கொள்ளையடி, கலவரம் செய், மக்களை கொள் ஆகியவைதான் என கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன். இந்த நாட்டில் யார் இருக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என மோடி முடிவு செய்ய முடியாது எனவும் மம்தா தெரிவித்து உள்ளார்.