பத்திரிக்கையாளருக்கு உதவிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று கொண்டு இருந்தபோது   இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பத்திரிக்கையாளர் ரஜிந்தர் வியாஸ் என்பவர் காயம் அடைந்தார். இதனை பார்த்த ராகுல் காயமடைந்த பத்திரிக்கையாளரை தனது காரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ராகுல் காந்தி அவர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.