கோவிட் -19 வேக்சின் பூஸ்டர் டோஸ்

இன்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சென்னை, காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். பூஸ்டர் டோஸை அனைத்து முன்களப் பணியாளர்கள்¸ இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும்… Continue reading மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

உலக நம்பர் 1 வீரர் டிஜோகோவிக் நவம்பரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸில் கலந்து கொள்ள விசா அப்ளை செய்கிறார். நவம்பர் 18-ல் விசாவை ஆஸ்திரேலியா அரசு அனுமதி வழங்கியது. டிசம்பர் 22-ல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதில் நெகடிவ் என வருகிறது. டிசம்பர் 30-ல் ஆஸ்திரேலியா அரசால் சிறப்பு சலுகையின் மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதி வழங்கப்பட்டது. ஜனவரி 1¸ 2022-ல் குவாரண்டை இல்லாத சிறப்பு சலுகை மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுகிறார். ஜனவரி 2-ல் என்ட்ரீ… Continue reading பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

ஹோட்டல் தொழிலில் அம்பானி

இந்தியாவின் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் தனது முதலீடுகளை ஹோட்டல் தொழிலில் ஈடுபத்தி உள்ளார். ஆனால்¸ இந்தியாவில் உள்ள ஹொட்டல்களில் அல்ல. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களில் தனது பங்குகளை முதலீடு செய்து ஆரம்பிக்க உள்ளார். கடந்த நான்கு வருடங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 14 சதவீகிதமும்¸ 80 சதவிகிதம் மீடியா மற்றும் தொலைத்தொடர்பு போன்ற நிறுவனங்களில் தனது முதலீடுகளை செய்து உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 592 கோடிகளை பிரிட்டனின் கிளப்ஸ்ரோக் பார்க்கில் முதலீடு செய்தார்.… Continue reading ஹோட்டல் தொழிலில் அம்பானி

பொழப்பற்ற அரசியல்வாதிகளா?

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஓடியும். நமது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இன்னும் கூட தீர்க்கப்படவில்லை. அந்த அந்த மாநிலத்தில் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு¸ எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு இதுதான் அவர்களின் அரசியல். இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க எந்த மத்திய அரசும் வரவில்லை. ஏனென்றால் பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர்களுக்கு பொழப்பு இல்லை அல்லவா? அதுதான் நிதர்சன உண்மை¸ மத்திய அரசால் ஒரு நாள்… Continue reading பொழப்பற்ற அரசியல்வாதிகளா?

சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

மொபைல் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி S21 FE 5G வருகிற ஜனவரி 10¸ அன்று அறிமுகம் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  மாடலின் ஆரம்ப விலை ரூ.48¸000 ஆகும். இதில், 128 GB  ரூ.70¸000 ஆகவும்¸ 256 GB ரூ.75¸400 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் : இதன் சிறப்பு அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  120… Continue reading சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

புத்தக வடிவில் டாடா

உலகின் முன்னனி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தக வடிவில் வரவுள்ளது. அவரது ஆரம்ப கால வாழ்க்கை முதல் தற்போதைய காலம் வரை அச்சு வடிவில் வரவுள்ளது. ரத்தன் டாடாவின் சுயசரிதை புத்தக வடிவில் வர உள்ள நிலையில் பதிப்பக உரிமை, உலக அளவில் ஏலம் விடப்பட்டது. அவற்றில் உலகின் பல முன்னனி பதிப்பக நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் இங்கிலாந்தை தலைமயமாக கொண்ட ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் ஏலத்தில் எடுத்து உள்ளது.… Continue reading புத்தக வடிவில் டாடா

மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு¸ பொதுப்பணித் துறை¸ தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம் ஒத்துழைய்புடன்¸ 2019¸ 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம் மற்றும் பட்டய (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 25.01.2022. முதன்மை தலைமைப்… Continue reading மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

இந்த வார இராசிப் பலன்கள் (09.01.2022 – 15.01.2022)

மேஷம் மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு பல விதத்திலும் சிறப்பான பலன்களை பெறும் வாரம். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களின் தைரியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமான வெற்றியை தரும். வரும் வாரங்கள் மேலும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் மொத்தத்தில் இந்த வாரம் ஏறுமுகமே. ரிஷபம் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் அனைத்து முயற்சிகளும் சற்று தடைப்படும்… Continue reading இந்த வார இராசிப் பலன்கள் (09.01.2022 – 15.01.2022)

எங்கே தவறு?

பாரத பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க பஞ்சாப் மாநிலம் சென்றார். விமானம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த இடத்துக்கு செல்ல இருந்த பிரதமர் அங்கு நிலவிய கடுமையான வானிலை மாற்றத்தால் விமானப் பயணத்தை ரத்து செய்து தரை வழி மார்க்கமாக செல்ல முடிவு செய்தனர். தரைவழி மார்க்கமாக சென்று கொண்டு இருந்தபோது அங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால் அங்கு செல்ல இயலவில்லை ஆதலால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.… Continue reading எங்கே தவறு?