கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும்… Continue reading மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு¸ பொதுப்பணித் துறை¸ தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம் ஒத்துழைய்புடன்¸ 2019¸ 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம் மற்றும் பட்டய (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 25.01.2022. முதன்மை தலைமைப்… Continue reading மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

ஜனவரி 15 வரை இக்ணோ அட்மிஷன்

இக்ணோ அட்மிஷன் ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டு உள்ளதாக அதன் மண்டல இயக்குனர் கிஷோர் தெரிவித்து உள்ளார். இதில் MBA படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகளில் இரண்டு வருடம் பணியாற்றிய அனுபவம் தேவை. கூடுதல் விவரங்களை https://onlineadmission.ignou.ac.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தலுக்கு முன் முழுஆண்டு தேர்வுகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற்று பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பள்ளிகளில் தேர்வுகளை முடிப்பதற்கு பள்ளி கல்விதுறை நடைவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

2020 முதல் அனுமதி இல்லை?

நாடு முழுவதும் பொறியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளுக்கு  அனுமதி நீட்டிப்பு வழங்கப்படும் என ஏஐசிடிஇ-யால் தெரிவிக்கபட்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் புதிய பொறியல் கல்லூரிகள் துவங்க அனுமதிக்க கூடாது என நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 3500 தொடக்க பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தலைமை செயலகதில் உள்ள முதல்வர் தனி பிரிவில் மனு அளித்து உள்ளனர். அரசின் இந்த முடிவால் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்து உள்ளனர்.