.பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கியதால் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டதுபொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.
இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன. பாகிஸ்தானில் அடுத்தடுத்து பல்வேறு ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீப் சிக்கி இருக்கின்றார். எனவே பனாமா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது