உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் பிரமாண்டா யோகா விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோன்றிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரவி பயன் அளித்து வருகிறது. ஏராளமான வெளிநாடுகளில் மக்கள் இதனை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், மற்ற மருத்துவத்தால் குணப்படுத்தாத பிரச்னைகளுக்கும் யோகா தீர்வாக அமைகிறது. இதனை மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக அளவில், இந்தியாவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து ஜூன் 21-ம்தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது