வேலூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் கதிர் ஆனந்துக்கு ஆதரவான தேர்தல் பரப்புரையை நிறைவு செய்ததாகவும் , சென்ற இடங்களிலெல்லாம் திரண்ட மக்கள் வெள்ளமும், ஆதரவும் உதய சூரியனின் வெற்றியை உறுதியிட்டுக் காட்டினதாகவும் மேலும் வேலூர் என்றுமே திமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்