இன்றைய தேசிய வங்கிகளின் நிர்வாக இயக்குனர்களில் பெரும்பாலும் பல சிக்கல்களில் சிக்கி இருக்கிறார்கள். ஏனென்றால் அளவுக்கு அதிகமான அதிகார மைய தொடர்பு, அளவுக்கு அதிகமான அதிகாரம் போன்றதேயாகும். இன்றைய நமது கட்டுரை ரிலையன்ஸ்க்கும் எஸ்பிஐ முன்னாள் இயக்குநருக்கும் என்ன தொடர்பு என்று குறித்து ஆராயலாம்.
இவரது முகத்தையும் செயல்பாடுகளையும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். எஸ்பிஐ வங்கி சீரமைப்பு என்று ஆரம்பித்து இவர் செய்த குளறுபடிகள் ஏராளம் அவற்றினால் நடுத்தர மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். எஸ்பிஐ முன்னாள் இயக்குனர்.2017 அக்டோபரில் ஓய்வு பெற்றார்.
இவரது காலத்தில் ரிலையன்ஸ் அடைந்த பலன்கள் என்ன?
1. ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கியது.
2. ஜியோ பேமெண்ட் திட்டம்.
3. Sbi தனது மின்னியல் பரிவர்த்தனையை யோனோவை மார்க்கெட்டிங் பண்ண ரிலையன்ஸ்வுடன் இணைந்தது செயல்பட்டது
இவரது பணிக்காலத்தில் கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரியும். ஏன் எஸ்பிஐ–ல் மட்டும் திடீர் கெடுபிடி என்று இப்பொழுது புரியும்.
என்ன நடந்தது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியில் கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்று உள்ளார். நமது நாட்டின் பெரிய வங்கியின் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரு வருடங்கள் காத்திருந்து ( ஒரு வருடம் முடிவதற்குள் வேறு பதவிக்கு செல்லக்கூடாது என்பதால் ) இப்பொழுது அந்தப் பதவியை கைப்பற்றியுள்ளார் இல்லை இல்லை சன்மானம் பெற்றுள்ளார்.
என்ன செய்வார் அவர் பணக்கஷ்டம் போலும்.