வீரர்களின் உடலை மீட்பதில் சிக்கல்

USAF F-15C Eagles from Elmendorf AFB, Alaska and Indian air force MIG-27 Floggers fly together over the Indian landscape during Cope India 04, the first bilateral fighter exercise between the two air forces in more than 40 years. The 10-day exercise concluded Feb 25. (IAF courtesy photo)

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்துக்குக் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. பயணத்தைத் தொடங்கிய அரை மணி நேரத்தில், அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் மேற்கொண்ட 13 பேரும் உயிரிழந்து விட்டதாக விமானப் படை வியாழக்கிழமை அறிவித்தது.

விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் இறந்தவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் மோசமான வானிலை காரணமாக , உடலை மீட்கும் பணியில்  தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *