
இந்திய விமான படை குண்டு வீச்சில் ஜெய்ஷ் இ முகமது முகாம் தகர்க்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இது குறித்து கூறியுள்ள நடிகர் கமல் ஹாஸன் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் எங்கள் 12 விமானங்களும் பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளது.. இந்தியா இந்த கதாநாயகர்களால் பெருமிதம் கொள்கிறது. நான் அவர்களின் வீரத்தை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.