விமானக் கட்டணங்கள் உயர்வு

விமானக் கட்டணங்கள் இந்தியாவில் அண்மைக் காலங்களில் விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன.
கடைசி நாள் முன்பதிவுக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 100 சதவீதம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். விமானங்கள் குறைவாக இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது என்றும் அதனைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எரிபொருள் தொகை பாக்கி, விமான நிலைய கட்டண பாக்கி, பாதுகாப்பு காரணத்தால் ஸ்பைஸ் ஜெட்டின் போயிங் விமானங்கள் தரையிறக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் விமானக் கட்டணங்களின் உயர்வுக்கு காரணமாக உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *