விஜயகாந்த், பிரேமலாத தங்களது பெயரில் உள்ள வீடு, கல்லூரியை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக அவரது சொத்துக்களை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்றைய நாளிதழ்களில் விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.