வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்ற பொதுதேர்தல் நடைபெற இருப்பதால், கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் நடைபெறும் நாளை தேர்தல் ஆணையம் அறிவித்த நாளிலிருந்தே மாநிலம் முழுவதும் கணக்கில் வராத பணம் எடுத்துச் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் மோசடி நடப்பதால் கணக்கில் வராத பணம் பயன்படுத்துவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிக அளவு பணம் பதுக்கப்பட்டிருந்தாலோ, பணம் இடமாற்றம் செய்யபடுவது தெரிந்தாலோ மேலும் விலை மதிப்புமிக்க பொருட்கள் எடுத்து செல்லபடுவது தெரிந்தாலோ அதுகுறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கபடும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 18004256669 அல்லது 044-28262357 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445467707 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தகவல் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.