பொன்மாணிக்கவேல் இந்தப் பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு பரபரப்பு என்ன அதிரடி செய்தியாக இருக்கும் எனப் பொதுவான எதிர்பார்ப்பு. இளைஞர்களுக்கு உந்து சக்தி, நேர்மைவாதிகளுக்கு உதாரணம், திருடர்களுக்குத் தேள் கொட்டியது போல் உணர்வு, அதிகார திருடர்களுக்கு ஒரு பாடம்.
இவர் சாதித்தது நேர்மை, உண்மை, துணிச்சல். அவரிடம் எதிர்பார்க்க முடியாதது எவரிடமும் வளைந்து கொடுக்காத தன்மை வரலாற்றுப் பக்கத்தில் பதிக்கப்படும் பெயர், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டு.
ஐஜி பொன் மாணிக்கவேல் இவர் பிறந்த ஆண்டு 1958 இவரின் பொழுதுபோக்குப் புத்தகம் படிப்பது. காவல்துறை என்றாலே முகம் சுழிக்கும் இந்தக் காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைப் போராடி மீட்டுள்ளார் ஒரு உன்னத மனிதர்.
நம் வீட்டில் ஏதாவது ஒரு புதையல் கிடைத்தாலே அதை அரசிடம் சேர்க்க மானம் வராத நமக்குத் தமிழகக் காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் இவர் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் கடத்தப்பட்ட விலை மதிப்பில்லாத கடவுள் சிலைகளை மீட்டு அதை அரசிடமே சேர்த்துள்ளார். என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
இவரின் உண்மைகள்:
நேர்மையும், உண்மையும் நிறைந்த பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள சுமார் 531 வழக்குகளை விசாரித்து வந்துள்ளார் என்பது தெரியுமா!
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டதால் அன்று முதல் இவர் நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன் என்று போற்றப்படுகிறார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து இவர் மீட்டதை இந்தியாவிற்கு வந்தபோது பிரதமர் மோடி இடம் ஒப்படைத்தார்.
பணத்தையும் புகழையும் விரும்பாத நேர்மையான துணிச்சல் மிக்கப் போலீஸ் ஆபீஸர் ஆகவே வலம் வருகிறார்.
சாதாரண இன்ஸ்பெக்டராகப் பணியை ஆரம்பித்து இரயில்வே ஐ.ஜி, கூடுதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி என்பதோடு இல்லாமல் பல நீதிபதிகளிடம் பாராட்டையும். பொதுமக்களிடம் ஏகோபித்த நம்பிக்கையும், வரவேற்பையும் பெற்றுள்ளார்.
தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை அடிமைகளாக நினைக்காமல் சிறப்பாகப் பணியாற்றும் அனைவரையும் பொது இடத்தில் பாராட்டி பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்துவது என்பது இவருக்கே உரித்தான நற்பண்பாகும்.
சக காவல்துறையினர் இவரை மிகவும் கறார் பேர்வழி என்று நினைக்கிறார்கள்.
தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி யாகப் பொறுப்பு வகிக்கும் பொன்மாணிக்கவேல் ரயில்வே ஐ.ஜி யாகவும பணியாற்றி வருகிறார். இதற்கு முன் இவர் வகித்த பொறுப்புகளிலும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்தார்.
இவர் எஸ்.பி-யாக இருந்த காலகட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் நாற்காலியில் உட்கார சொல்லி பேச வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவு போட்டார்.
இவர் தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி யாகவும் நான்கரை வருடங்கள் இருந்தார். இவர் தலைமையிலான டீம் தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது.
சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளிலும் பதிவாகி உள்ள குற்றவாளிகளை விரைவாகக் கண்டு பிடித்து வழக்குகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்.
தமிழ்நாட்டில் இதற்கு முன் வேறு எந்த ஒரு காவல்துறை அதிகரிக்கும் இந்த அளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுக்கள் குவிந்ததில்லை. பாராட்டுகளோடு மட்டுமல்லாமல் பலர் உணர்ச்சிபூர்வமாக நன்றியும் தெரிவித்தார்கள்.
அப்படிப்பட்ட இந்த மாமனிதனின் பதவிக்காலம் நிறைவடைகின்றது. இவர் இன்று(30-11-2018) சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டார்.
ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர் தன் போலீஸ் பணியில் சேர்ந்த ஆண்டு 1989 அன்று முதல் இன்று வரை அவரின் நேர்மையும், கண்ணியமும் மக்களின் ஈர்ப்பும், நீதியும் பனியில் உள்ள ஈடுபாடும் தான் இவரின் உயர்வுக்குக் காரணமாகும்.
இவரது வாழ்க்கையும், பணி ஈடுபாட்டையும் படமாகக் காட்சி படுத்தி உள்ளனர்.