அரவக்குறச்சி,திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19 ஆம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த மாதம் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்பு மனுக்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது. மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல்
