இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார். இத்தகவல் தெரிவிக்கபட்டவுடனையே வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன், முதலமைச்சர் வீட்டில் சுமார் 1 மணி நேரம் வரை சோதனை நடத்தினர். சோதனையில் மர்மநபர் தெரிவித்த தகவல் வெறும் புரளி என தெரியவந்ததது. அதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்
