மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க ஜன.15 – ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.