முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறியுள்ள பதிவில் இந்திய விமான படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்.விமான படையின் துணை தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்து கூற மறந்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது? இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன்.ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சொன்னதில் என்ன தவறு என கேள்விகளை எழுப்பியுள்ளார்.