அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் எந்தப் பகுதியிலும் புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் சஹாராபத்தே தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாகவும் இதனால் அரசு பொறியியல் கல்லூரிகளில் 40 ஆயிரம் சீட்கள் குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.