பீகாரில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

பீகார் மாநிலத்தில் வெயில் கொளுத்துகிறது. பாட்னா, கயா, பாகல்பூர் நகரங்களில் நேற்று 115 டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசியது. பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 70 பேர் வரை பலியாகி உள்ளனர்.[sg_popup id=11211]

அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும், நவடா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

வெயில் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார். வெயில் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9–ந் தேதி முதல் நேற்று வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *