இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளது.மிஷன் சக்தி என்ற பெயரிலான தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியது. தாழ் நீள்வட்ட பாதையில் சென்ற ஒரு செயற்கை கோளை இன்று இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.மூன்றே நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றி பெற்றது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பிறகு செயற்கை கோள் எதிர்ப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியது இந்தியா தான்.விண்வெளி போட்டியில் ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு.தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தியா செயற்கை கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது.விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஏவுகணை தற்போது இந்தியாவிடம் உள்ளது.இந்திய செயற்கை கோள்களை பாதுகாக்கும் வகையில் இன்று ஒரு செயற்கை கோளை சுட்டு வீழ்த்தினோம்.
பூமியில் இருந்து 300 கி.மீ தொலைவில் சுற்றி வந்த செயற்கை கோளை இந்தியா வீழ்த்தியுள்ளது.சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளது.நாட்டு மக்களுக்கும், மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.