இலங்கை பிரதமர் விக்ரமசிங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அந்தப் பயணம் மூன்று நாட்கள் என்ற திட்டத்துடன் இந்தியா வந்துள்ளார்.இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.தன்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு(ரா) முயற்சி செய்ததாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் விக்கிரமசிங்கின் சுற்றுப்பயணம் அடுத்த நகர்வு என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.