பாராட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய விமான படை குண்டு வீச்சில்  ஜெய்ஷ்  இ முகமது முகாம் தகர்க்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இ்து குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானில் பயங்கரவாத இலக்குகளை உலுக்கியதன் மூலம் எங்களை பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை விமானிகளின் வலிமையை நான் வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *