பரபரப்பான கட்டத்தில் ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டி

லக்னோவில் நடைபெற்று வரும் உத்தர்பிரதேஷ், சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்து உள்ளது.

முதல் இன்னிங்சில் உத்தர்பிரதேஷ் அணி 385 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரிண்குசிங் 181 பந்துகளில் 150 ரன்கள் குவித்து அசத்தினர். சௌராஷ்டிரா அணியின் ஜய்தேவ் உணத்கட் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாம் இன்னிங்ஸில் 177 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய உத்தர்பிரதேஷ் அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சௌராஷ்டிரா அணியின் தர்மேந்திரா ஜெடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தற்போது 3 விக்கெட்களை இழந்து 222 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் துவக்க வீரர் ஹர்விக் சிங் 107 ரன்களுடன் களத்தில் உள்ளார்.சௌராஷ்டிரா அணி வெற்றி பெற இன்னும் 150 ரன்கள் தேவைப்படும் வேளையில் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *