நீதிமன்றங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்

உச்சநீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்யமான விசாரணை ஒன்று நடைபெற்றது. இதுகுறித்துப் பல வருடங்களுக்கு முன்பே விவாதிக்க வேண்டிய செய்தி இது இப்போதாவது இதுகுறித்து யோசித்தார்கள் என்பது சந்தோஷப்படக் கூடிய செய்தியாகும்.அது என்னது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆய்வுக்காகச் சிறைசாலைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. (ஒரு சில சிறைச்சாலைகளில் உலகில் கிடைக்காத பொருட்கள் எல்லாம் அங்குக் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.அதை பற்றி நாம் பேச வேண்டாம்).

இதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தானாக விசாரித்து வந்தது. இந்த விசாரணை நேற்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமர் யோகி தனது கருத்தை பதிவு செய்தார்.

அதாவது நீதிமன்றங்கள் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்க தாமதப்படுத்துவதால் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது.

நீங்கள் எங்களுக்கு நாங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என இங்குக் கூற இயலாது கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க என்ன வழிமுறைகள் இருக்கிறது என ஆராயுங்கள் என்று கூறினார். உண்மையில் எங்குப் பிரச்சினை என்பதை இக்கட்டுரை விவாதிக்கிறது.

மொத்தத்தில் எந்த வழக்காக இருந்தாலும் காலத்தாமதத்தால் குற்றவாளிகள் பலனடைவதும், நிரபராதிகள் துன்பப்படுவதும் வழக்கமாகியுள்ளது. எந்த வழக்குகளுக்கும் காலக்கெடு கிடையாது. விசாரணை முடிந்தும் பலவழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுமக்கள் காலதாமதமான நீதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் அரசாங்கத்தைக் குறை சொல்வதும், அரசாங்கம் நீதிமன்றத்தை குறை சொல்வதும் வழக்கமான ஒன்றுதான்.

நிறைய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கட்டமைப்பில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. ஆனால் தீர்ப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டுமே தவறு செய்பவர்கள் குறைவார்கள். தவறு செய்தால் தப்பித்து விடலாம் என்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

குடிமக்களின் மனநிலையில் கடுமையான மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்த மாறுதலுக்கு ஏதாவது எதிர் தீர்வு உண்டா! என்றால் இல்லை.இதனால் தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசை குறை கூறியுள்ளார்கள்.

அதாவது” சட்டத்தையும், நீதித் துறையையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள் மற்ற வழி முறைகளைக் கையாலுங்கள் எனக் கூறியது”.

காலதாமதத் தீர்ப்புகளினால் நிறையச் சாட்சிகள் மாறிவிடுகிறது. முக்கியமான சாட்சிகள் இறந்துவிடுகிறார்கள். இதனால் உண்மையான விசாரணை மற்றும் தீர்ப்புக்குத் தடையாக உள்ளது.

பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளுக்கும் கூட இவ்வளவு மாணவர்களுக்கு இவ்வளவு ஆசிரியர் என வரையறு செய்யும் அரசு நீதிமன்றத்தில் ஏனோ இவ்வாறு வரையறு செய்வதில்லை.

வழக்குகளின் அடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன தவறு. சாதாரண ஊழியர்களுக்கு டார்க்கெட் வைக்கும் டிஜுட்டல் உலகத்தில் நீதிமன்றக்களில் உள்ள வழக்குகளுக்கு மட்டும் டார்க்கெட் கிடையாது.
காலதாமதம் என்பது உண்மையை விழிங்கி விடும் என்பதே உண்மை.
நீதிமன்றங்களின் ஊழியர்களை அதிகரிப்பதும், அரசு வழக்கரிஞர்கள் அதிகரிப்பு உண்மை. நேர்மையான நீதிபதிகளைக் கண்டறிந்து எண்ணிக்கை அதிகரிப்பது, போதுமான சம்பளம் மற்றும் நீதித்துறைக்கு தேவையான நிதிகளை அளிப்பது போன்றவற்றின் மட்டுமே தீர்வுகளை ஏற்படுத்த முடியும்.

பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுத்து நிதிகள் ஒதுக்கப்படுகிறதோ அதில் பத்து சதவீதமாவது நீதிமன்றங்களுக்கும் ஒதுக்கினால் இவ்வளவு பிரச்சினைகள் வராது.

ஆனால் எந்த அரசும் நீதித்துறையின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்துவதில்லை, மாறுதலாக நீதிமன்றத்தில் அரசின் தலையீடு உள்ளது என்பதை யாரலும் மறுக்க இயலாது. சில தினங்களுக்கு முன் பாரத பிரதமர் மோடி அவர்கள் முந்தைய காலங்களில் காங்கிரஸின் தலையீடு உச்சநீதிமன்றத்தில் இருந்தது என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

காங்கிரஸ்சும் மோடியின் தலையீடு நீதிமன்றங்களில் இருப்பதாகக் குற்றம்சாட்டியது. இது உண்மையான ஜனநாயத்துக்கு நல்லதல்ல . சாதரணமக்கள் நம்புவது நீதிமன்றத்தை மட்டுமே.
தீர்ப்புகளில் மட்டும் தலையிடும் அரசுகள் நீதிமன்ற உள் கட்டமைப்பில் ஏன் தலையீடுவதில்லை! மற்ற துறைகளுக்கு மட்டும் தனிப் பட்ஜெட் போடும் அரசுகள் நீதிதுறைக்குத் தனிப் பட்ஜெட் போட்டால் என்ன?

இதன் மூலம் குறைகளைத் தீர்க்கமுடியும் அல்லவா!
ஞாபகம் வருகிறது சில தினங்களுக்கு முன்பு ஒரு தலைமை நீதிபதி போதிய நிதி இல்லை எனப் புலம்பியது. நிதி இல்லா விட்டால் நீதித்துறை எவ்வாறு இயங்கும். இது ஒன்றும் லாபகரமான தொழில் துறை அல்ல நியாயத்தை நிலைநாட்டும் துறை, எவ்வளவு நிதி ஒதிக்கினாலும், செலவு ஆனாலும் ஒரு கட்டுபாடன சமுதாயத்தைக் கட்ட அமைக்க நீதி மன்றங்களால் மட்டுமே முடியும்.

இதனை ஆண்டவர்களும், ஆளுபவர்களும் உணர்ந்தால் சரி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *