நாளை யாருக்கு வெற்றி

ஐந்து மாநிலகளுக்கான தேர்தலினை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து முடித்தது.
அதில்  சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா தேர்தல் முடித்தது.

மத்திய பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குபதிவில் அதிகபட்சமாக 75% வாக்குபதிவு நடத்துள்ளது.கடந்த தேர்தலைவிட 2.5% சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 2907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 230 தொகுதியாகும். பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 229 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.

ராஜஸ்தானில் மொத்தம் 2,247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 200 தொகுதியாகும். இதில் பகுஜன் சமஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடிர் மரணம் அடைத்தால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 119 தொகுதியாகும் இந்தத் தொகுதியில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேரியிடையான போட்டி கங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் தான் உள்ளது.
பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாரதபிரதமர் மோடி அவர்களும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வந்தார்கள். வாக்கு எண்ணிக்கையானது நாளைத் துவக்குகிறது. உண்மையான நிலவரம் டிசம்பர் 11 தேதி நாளை  10 மணியளவில் தெரியவரும்.

மேலும் ஒட்டு எண்ணிக்கை நடைப்பெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *