ஐ.நா. முன்னேற்றத் திட்ட நல்லெண்ணத் தூதராக தமிழகத்தில் பிறந்த அமெரிக்கவாழ் இந்தியரான பத்மா லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையில் பிறந்த அவர் தமது தாயின் மருத்துவப் பணியை ஒட்டி அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்தார். மாடல் அழகி, உணவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர், டாப் செஃப் நிறுவனத்தின் செயலதிகாரி உள்ளிட்ட பல பொறுப்புக்களை வகிக்கும் அவர் ஐக்கிய நாடுகள் சபை முன்னேற்ற திட்டத்துக்கான நல்லெண்ணத் தூதராக நேற்று அறிவிக்கப்பட்டார்.