2019-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பிரச்சார விதிகளையும் தேர்தல் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு “சந்திரபாபு நாயுடு” அவர்கள் திமுக தலைவர் “மு.க.ஸ்டாலின்” அவர்களே அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இன்று காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாலர் ஆன “சஞ்சய்தத்” அவர்கள் இன்று திமுக தலைவர் “மு.க.ஸ்டாலின்” அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் விரைவில் ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு நடைபெறும் என சூசகமாக தெரிவித்தார்.