நாடுமுழுவது உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். இப் பேரணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள சுமார் 208 அமைப்புகள் பங்கேற்கின்றன.
முதலில் புகழ்பெற்ற ராம்லீலா மைதனாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அதன் பிறகு பாரளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்கிறார்கள் இதனால் அங்குக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நான்கு லட்சத்துக்கும் குறையாமல் கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது. பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் முகாமிட்டு உள்ளார்கள்.
விவசாயகடன் தள்ளுபடி, உற்பத்தி பொருள்களின் விலையை நிர்ணயித்தல் எனப் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.