அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு (ப்ளஸ் டூ) பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு உங்களை அழைத்துச்செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தேர்வினை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.பிரகாசமான எதிர்காலம் உங்கள் ஒவ்வொருவருக்கும் காத்திருக்கிறது . உங்களின் கனவுகளை எட்டிப்பிடித்துச் சாதனையாளராக மிளிர மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இறையருளிடம் உங்களுக்காக வேண்டுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.
டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி
