இன்று ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதைஅடுத்து பயங்கரவாதிகள் இயக்கத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இன்னும் வேறு யாராவது பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் ஸ்ரீனு கிராமத்தில் நடந்து வருகிறது. இதனால் அந்த கிராமத்திற்கு பாதுகாப்பு படையினரால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை பயங்கரவாதிகள் யாரும் துன்புறுத்தாத வகையில் இந்தத் துப்பாக்கிச் சூடு அதிகாலை முதல் நடந்து வருகிறது.