தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது மறக்க இயலாது. இதனால் கடும் கொந்தளிப்பை தேவையற்ற உயிர்சேதமும் ஏற்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பல வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தற்பொழுது எப்.ஐ.ஆர் ரில் போலீஸ் மற்றும் வருவாய் துறை சேர்ந்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
அதாவது சதிதிட்டம் தீட்டுதல், கொள்ளை, திருட்டு, சட்ட விதிகளை மீறுவது எனப் பல பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.