அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, இன்னும் பலர் நடித்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன், படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய் 17 கோடி தரவிருக்கிறது. இதனால் ராஜராஜன் மீது வழக்கு தொடர்ந்தது பாகுபலி படத்தரப்பு ‘சிந்துபாத்’ வெளிவர நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியது.
இதற்கிடையில் நேற்றைய முன்தினம் இப்படத்தை நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை வெளியிடுவதாகக் கூறி ஆர்கா மீடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் பூஜிதா கொரன்டாலா ராஜ ராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு படத்தை வெளியிட மீண்டும் தடை உத்தரவு வாங்கியது. அந்த தடையை நீக்கக்கோரிய வழக்கில் ‘கே’ புரடக்ஷன்ஸ் ராஜராஜனுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வான்சன் நிறுவனமும், யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து தடை உத்தரவை நீக்கக் கோரியுள்ளது. இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.