சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அந்த தீர்ப்பினை எதிர்த்து பல்வேறு அமைப்பினர்களும் போரட்டம் நடைத்தி வருகின்றனர்.
அதனால் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.அந்த உத்தரவு இன்று நள்ளிரவு முடியும் தருவாயில் அந்த மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை இரண்டு நாட்கள் நீட்டித்து உத்தரவு பிறபித்துள்ளார்.
இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் பங்கேற்கலாம் எனத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் வந்த்துகொண்டே இருக்கிறது.
இது சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்தது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அது சம்பந்தமாகப் பேட்டியளித்த கேரள முதல்வர் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது என்றும். வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மரபுகள் குறித்து ஆழ்ந்து ஆரய்த்து முடிவுகள் எடுக்கக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.