காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான சித்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார்
தேர்தல் பிரசாரத்தில் தொடர்ச்சியாக பேசியதில் குரல்வளை பாதிப்பு
இந்தியாவில் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து அனல் பறக்கும் வகையில் தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான சித்து இதுவரை 28 நாட்களில் 80 பேரணிகளில் பங்கேற்று பேசியுள்ளார். தொடர்ச்சியாக பேசியதில் அவரது குரல்வளை பாதிப்படைந்து உள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிவிரைவில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்து மீண்டும் பிரசாரத்திற்கு அவர் திரும்புவார் என தெரிவித்து உள்ளது.