எஸ்பிஐ எச்சரிக்கை

ஆன்லைன் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது சமீபக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

உதாரணமாக, மக்களுக்குக் கொடுக்கும் மானியங்களை அவரவர் வங்கிக்கணக்குகளில் செலுத்துவதுடன், அனைத்து மக்களும் கட்டாயம் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.

இதன் மூலம் ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.இதனால், வரும் காலங்களில் டிஜிட்டல் பரிமாற்றம் என்பது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இத்த டிஜிட்டல் பரிமாற்றத்தில் நடக்கும் திருட்டுகளைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கியானது மற்ற வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு பாதுகாப்பு முறைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி, வங்கி கணக்குகளுடன் மொபைல் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. மொபைல் எண்ணை இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களது ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்காளிகமாகவோ அல்லது நிரத்தரமாகவோ நிறுத்தப்படும் எனவும், அவர்கள் ஏடிஎம் மூலம் மட்டும் பணம் எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருத்தது.

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை நவம்பர் 30 தேதிக்குள் வங்கிகணக்குடன் மொபைல் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. தவறும் பட்சத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுத்தப்படும் என எஸ்பிஐ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *