உயர்நீதி மன்றம் உத்தரவு

தீபாவளி தினத்தை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளிவருகின்றன, அவற்றில் பெருபான்மையான படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே அரிதாக உள்ளது.கிடைக்கும் திரையரங்களில் கூடுதல் காட்சிகளை ஓட்டி கல்லாகட்ட பெரும்பாடு படுகிறார்கள்.

ஏனென்றால் எந்தப்படமாக இருந்தாலும் ஒருவாரத்துக்கு மேல் தியேட்டருக்கு ரசிகர்கள் வருவதில்லை. இதைப் புரிந்து கொண்டு கூடுதல் காட்சிகளைப் போட்டு ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் ஏழு காட்சிகள் கூடத் திரையிட்டு வசூலை குவிக்கிறார்கள். இதற்க்கு உயர்நீதி மன்றம் கடுவாளம் போட்டு உள்ளது.

வீதிமுறைகளை மீறி காட்சிகளைக் கூடுதலாக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் பல திரையரங்குகளில் கூடுதல் பணத்தையும் வசூலிக்கின்றன. இதனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் சரி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *