திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது! அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? என பாமகவை நோக்கி கேள்விகள் கேட்டு உள்ளார்.