இலங்கைக்குக் கடத்தல் ரூ.5 லட்சம் மதிப்பிலான கரன்சிகள்

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான கரன்சிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கைக்குப் பயணம் செல்ல இருந்த இரண்டு பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்பொழுது அவர்கள் இருவரும் ஒரு சூட்கேஸில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,555 குவைத் தினார் மற்றும் 2,800 யூரோ கரன்சிகள் பறிமுதல் செய்தனர் இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து, கொழும்புக்கு செல்ல வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் இருவரும் கரன்சிகளைக் கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் விசாரித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *