நாம் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் தாயகவும் ,தெய்வமாகவும் வாழும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், அவர் வழி தந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ, ஆரம்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. மேலும் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மென் மேலும் வளரவும், இதய தெய்வம் அம்மாவின் வழியில் தமிழகத்தைக் காத்திட சூளுரைப்போம் எனவும், தரணி போற்றும் வெற்றியைத் தேர்தல் களத்தில் குவிப்போம் எனவும் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.