
இந்தியாதமிழ்நாடுபுதிய செய்திகள்வானிலை அறிக்கை
இயல்பான அளவு மழை
இந்த காலகட்டத்தில்(அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை) 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது இயல்பை விட அதிகம் ஆகும்.
மாவட்டங்கள் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்கள் இயல்பை விட அதிகம் மழையை பெற்று இருக்கிறது. அதில் நீலகிரி அதிகபட்சமாக மழை பெற்றுள்ளது. இயல்பைவிட 74 சதவீதம் மழை அதிகம் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.
அதேபோல், குறைந்தபட்ச மழைப்பதிவை பெற்ற மாவட்டங்களில் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகும். அந்த மாவட்டங்கள் இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில் 13 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.