இமாலய இலக்கை துரத்தி பிடித்தது சௌராஷ்டிரா அணி

லக்னோவில் நடைபெற்று வரும் உத்தர்பிரதேஷ், சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் கடும் போராட்டத்துக்கு பின் வெற்றி அடைந்தது சௌராஷ்டிரா அணி.

15 ஆம் தேதி துவங்கிய போட்டியின் முதல் இன்னிங்சில் உத்தர்பிரதேஷ் அணி 385 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரிண்குசிங் 181 பந்துகளில் 150 ரன்கள் குவித்து அசத்தினர். சௌராஷ்டிரா அணியின் ஜய்தேவ் உணத்கட் 5 விக்கெட்கள் கைப்பற்றினார்.

சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் இன்னிங்ஸில் 177 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய உத்தர்பிரதேஷ் அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சௌராஷ்டிரா அணியின் தர்மேந்திரா ஜெடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சௌராஷ்டிரா அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹார்விக் தேசாய் சதம் அடித்து 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விக்கெட் கீப்பர் அனெள் படேல் தன் பங்குக்கு 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். புஜாரா 67 ரன்கள் உடனும், ஜாக்சன் 73 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சௌராஷ்டிரா அணி 4 விக்கெட்களை இழந்து 372 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *