இந்தோனேஷியா பேட்மின்டன் சாம்பியன்

ஜகார்த்தா நகரில் நடந்த இந்தோனேஷியா பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில்  சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் கரோலின் மரின் 4_10 புள்ளிகள் என முன்னிலையில் இருந்த போது முழங்காலில் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதன் மூலம் இந்தோனேஷியா பேட்மின்டன் சாம்பியன் ஆனார் இந்திய வீராங்கனை சாய்னா நேவால்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *