இந்திய விமானப்படை விமானம் மாயம்!

 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

இந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்டோனோவ் ஏன்- 32 ரக விமானம், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து மதியம் 12.25க்கு புறப்பட்ட விமானம் காணாமல் போனதாக தகவல்,

கடைசியாக 1 மணிக்கு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதாக தெரிகிறது. அதிலிருந்து, தற்போது வரை விமானம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *