வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை ரூ.2000 நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் ரூ. 2,000 சிறப்பு நிதியுதவி திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஏழைக்குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்குவதில் எவ்வித தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
