
வாழைப்பழம் உண்டா இல்லையா?
இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் அணி நிர்வாகமும் இணைந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் 2019-ல் நடைபெறும் உலககோப்பை வெல்வது எவ்வாறு, அது சம்பந்தமான பலம்,பலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறிந்து தெளிவாக விவாதித்து உள்ளார்கள்.
கடந்த காலங்களில் இந்திய வீரர்களுக்கு வாழைப்பழம் கூடுதலாகத் தர மறுக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றைச் சரிசெய்ய, தற்பொழுது தமது கையிருப்பில் அதிக வாழைப்பழக்களை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோலி மற்றும் ரவிசாஸ்திரியின் முக்கியக் கோரிக்கையான பெண் தோழிகளைக் கூட அனுமதிப்பது பற்றியும் கடுமையாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிக்கிறது. வீராத்கோலி பெண் தோழி இருந்தால் தான் கவனம் சிதறாது எனவும் சில வீரர்கள் கவனம் சிதறிவிடும் எனத் தெரிவித்தாகவும் தெரிகிறது. இதன் முடிவு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஆடுகளங்களில் திறமையாகச் செயல்படுவது எப்படி என்று விவாதித்தாகத் தெரியவில்லை. உள்ளரங்குகளில் எவ்வாறு சொகுசாக இருப்பது என்று அதிகம் விவாதித்தாகத் தெரிகிறது.