
சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில்லை” என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள ட்ரம்ப், அங்குள்ள ஐடிவி என்ற டிவி சேனலுக்குப் பேட்டியளிக்கும் போது இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போடப்பட்ட ‘பாரீஸ் ஒப்பந்தத்தில்’ இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பேட்டியின் போது ட்ரம்ப், “உலகிலேயே மிகவும் சுத்தமான காற்றைக் கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று” எனப் பேசியுள்ளார்.